* திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் முதல்நாளில் துர்க்கை வழிபாடும், இரண்டாம் நாளில் பிடாரியம்மன் வழிபாடும், மூன்றாம் நாளில் விநாயகர் வழிபாடும் நடக்கிறது.
* இரண்டு தலபுராணங்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு உள்ளன. இதில் அருணகிரிப்புராணத்தை எழுதியவர் கண்கட்டி மறைஞான
சம்பந்தர். அருணாசல புராணத்தை எழுதியவர் சைவ எல்லப்ப நாவலர்.
* சோணாசலத்திற்கு(திருவண்ணாமலைக்கு) சிறந்த க்ஷேத்திரம் இல்லை. சோம வாரத்திற்கு (கார்த்திகை மாத திங்கள்கிழமை விரதம்) சிறந்த விரதம் இல்லை என்று ஒரு பழமொழி உண்டு.
* காலபைரவர், சொர்ண பைரவர் என்று இரு சன்னிதிகளும், கம்பத்து இளையனார், கோபுரத்து இளையனார் என்று இரண்டு முருகன் சன்னிதிகளும் இங்குள்ளன. கிளி கோபுரத்தின் அருகே பிச்சை இளையனார் என்ற முருகன் சன்னிதியும் உள்ளது.
* விசிறி சாமியார் என்னும் யோகி ராம் சுரத்குமார், திருவண்ணாமலையில் வாழ்ந்த காலத்தில், இங்குள்ள சம்பந்த விநாயகர் சன்னிதி முகப்பிலேயே தங்கியிருந்தார்.
* கார்த்திகை தீப திருவிழாவின் போது பஞ்சமூர்த்திகளின் புறப்பாடு நடக்கும். இதற்கு முன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருள்வார். அவர் வந்ததும் மலையில் தீபம் ஏற்றப்படும்.
* சம்பந்த விநாயகர் கோவிலுக்கு எதிரில் உள்ள மண்டபத்தில், அந்தக் கால மன்னர்கள் முடிசூட்டிக் கொள்வது வழக்கம்.
* சிவன் கோவில்களில் ஆறுகால பூஜையின் போது சுவாமிக்கு 16 வகை தீபங்கள் காட்டுவர். இதில் மகாதீபம் என்னும் தீபம் சிவனையே குறிப்பதாகும். திருவண்ணாமலை தீபத்தை மகாதீபம் என்று சொல்வர்.
* புதுச்சேரியில் உள்ள பிரஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப் இண்டாலஜி என்னும் நிறுவனம் திருவண்ணாமலைக் கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்து ஆங்கிலம், பிரெஞ்சு மொழியில் வெளியிட்டுள்ளது.
* மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம் ஆகிய இரு நாட்களில் நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக எழுந்தருள்வார். வேறு எந்த உற்சவரும் இதன் வழியாகச் செல்வதில்லை.
* மலை தீபம் ஏற்ற காண்பிக்கப்படும் தீப்பந்தத்தை "எலால்' என்று சொல்வர். சிக்னல் போல இந்த தீப்பந்தம் காட்டியதும் மலைதீபம் ஏற்ற அண்ணாமலைக்கு அரோகரா என்ற சப்தம் எங்கும் எதிரொலிக்கும்.
* தீபதரிசனம் பார்க்க வருவோருக்கு சட்டிச்சோறு பிரசாதம் அந்தக்காலத்தில் அளிப்பது வழக்கம். இதில் புளியங்கறி, மிளகு ரசம், உப்பு, நெய், தயிர், பாக்கு இருக்கும். வாழை இலையும் தரப்படும்.
* இக்னீஷியஸ் ராக் என்னும் பாறை வகையைச் சேர்ந்த மலை திருவண்ணாமலை. "நெருப்பினால் உண்டான மலை' என்பது இதன் பொருள்.
* அருணகிரியாரின் தாய் முத்தம்மை வழிபட்ட விநாயகர் முத்தம்மை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்தக் கோவில் தேரடி வீதிக்கும், கொசமடத் தெருவுக்கும் இடையே உள்ள ரேடியோ கிரவுண்ட் என்னும் பகுதியில் உள்ளது.
* திருமஞ்சன கோபுரத்தின் வழியாக தினமும் அபிஷேக நீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், சிவன் அபிஷேகத்திற்கு இதைப் பயன்
படுத்துவதில்லை. நடை திறப்பதற்கு முன் இந்நீரைக் கதவின் முன் தெளிப்பது வழக்கம்.
* திருவிழா காலங்களில் நாதஸ்வரத்துடன் நபிரி, பாங்கரா, கொம்பு, செண்டை போன்ற அந்தக் கால வாத்தியங்களும் இங்கு இசைக்கப்படுகின்றன.
* திருவண்ணாமலைக் கோவிலின் பரப்பு 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுர அடி.
* சிவன் கோவில்களில் உற்சவராக சோமாஸ்கந்தர் வீற்றிருப்பார். இங்குள்ள சோமாஸ்கந்தருக்கு மட்டும் "பக்தானுக்ரக சோமாஸ்
கந்தர்' என்னும் சிறப்பு பெயர் வழங்கப்படுகிறது.
* சிவனுக்குரிய 64 மூர்த்தங்களில் ஒன்று அண்ணாமலையார் மூர்த்தம். இதை சிற்பநூல்கள் லிங்கோத்பவ மூர்த்தி என்று குறிப்பிடுகின்றன. கருவறையின் பின்புறத்தில் இவருக்கு சன்னிதி இருக்கும்.
* அண்ணாமலை என்பதற்கு "நெருங்க முடியாத மலை' என்று பொருள். நெருப்பு வடிவமாக இருந்ததால் அடிவாரத்தையும், உச்சியையும் யாராலும் நெருங்க முடியவில்லை என்பது இதன் விளக்கம்.
* 171 அடி உயரம் கொண்டது இங்குள்ள அம்மணியம்மாள் கோபுரம். இது விஜயநகர மன்னர்களால் தொடங்கப்பட்டு, பாதியில் நின்று போனது. இத்திருப்பணியை நடத்தி முடித்த அம்மணி அம்மாளின் பெயரால் தற்போது அழைக்கப்படுகிறது.
* திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை சிறப்பிக்கும் விதத்தில் அஞ்சல் துறை அகல் தீபமிட்ட சித்திர முத்திரையை (பிக்சோரியல் கேன்சலேஷன்) 12.12.1997ல் வெளியிட்டது.
* அண்ணாமலையாருக்கு சாத்தப்படும் ஆடைகள் வைக்கப்படும் அறை வஸ்திர கொட்டடி எனப்படுகிறது. பொக்கிஷ அறைக்கு அருகில் இது உள்ளது.
* ராஜகோபுரத்தின் எதிரில் உள்ள சர்க்கரைக் குளக்கரையில் நந்தி உள்ளது. மலையைச் சுற்றி அமைந்துள்ள அஷ்ட நந்திகளில் இதுவே முதல் நந்தி.
* பஞ்சமுக சுவாமி என்னும் இசக்கி சுவாமிகள் திருவண்ணாமலையை 1008 முறை அங்கப் பிரதட்சணம் செய்தவர். இல்லறத்
துறவியான இவர் 1959ல் திருவண்ணாமலைக்கு வந்தார்.
* திருமூலர் பாடிய திருமந்திரத்தில் திருவண்ணாமலை வரலாறு குறித்து, ஒன்பது பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
* செவ்வாய்க்கிழமையில் திருவண்ணாமலையைச் சுற்றி வந்தால் மோட்சம் கிடைக்கும் என்று மக்களிடம் சொன்னவர் சேஷாத்ரி சுவாமிகள்.
* உயிரை மாய்க்க முயன்ற அருணகிரிநாதரைக் காப்பாற்றிய தலம் திருவண்ணாமலை. இத்தலத்து முருகன் மீது, இவர் 79 திருப்புகழ் பாடல்கள் பாடியள்ளார்.
* மாசி மாதம் முதல் ஐந்து நாட்கள், உண்ணாமுலை அம்மன் சன்னிதியில் தினமும் முகத்தில் படும் சூரியஒளி கொஞ்சம் கொஞ்சமாக பாதம் வரை இறங்கி செல்வது சிறப்பானதாகும்.
* ராஜகோபுரத்தின் கீழ்தளத்திலுள்ள தூண்களில் பரதநாட்டியத்தின் 108 கரணங்கள் அற்புத சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
* திருவண்ணாமலை கோவிலின் தலவிருட்சம் மகுட மரம். இதற்கு மகிழ மரம் என்றும், வடவால விருட்சம் என்றும் பெயருண்டு.
* அக்னி நட்சத்திரத்தின் போது அண்ணாமலையாருக்கு வாசனை திரவியம் கலந்த குளிர்ந்த நீரால் அபிஷேகமும், தயிர் சாத நைவேத்யமும் செய்வதோடு, நீர் சொட்டும் தாராபாத்திரமும் வைக்கின்றனர்.
* கார்த்திகை தீபத்திற்கு மறுநாள், தை மாதத்தின் மூன்றாம் நாள் ஆகிய இரு தினங்களில் அண்ணாமலையாரே இங்கு கிரிவலம் வருவார். பக்தர்கள் அண்ணாமலையாரோடு சேர்ந்து கிரிவலம் வரலாம்.
* மலையின் மீதுள்ள முலைப்பால் தீர்த்தத்தை செப்பனிட்டு திருப்பணி செய்தவர் நரிக்குட்டி சுவாமிகள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் தமிழில் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார்.
* தென்திசை கைலாயம், கவுரி நகரம், சுத்த நகரம், ஞானபுரி என திருவண்ணாமலைக்குரிய வேறு பெயர்கள் உள்ளன.
* வெளிநாட்டவர் திருவண்ணாமலைக்கு வரக் காரணமாக இருந்தவர் பால்பிரண்டன். 1930ல் இங்கு வந்த இவர் எழுதிய நூலில் திருவண்ணாமலை, ரமணர் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இவர் நூல் எழுதிய பின்னரே வெளிநாட்டவரையும் அண்ணாமலை
ஈர்க்கத் தொடங்கியது.
* திருவண்ணாமலை கோவில் கோபுரங்களைப் பற்றி ஆராய்ச்சி நூலை எழுதிய மேலைநாட்டவர் எம். எச். கிரேவ்லி.
* அண்ணாமலையாருக்கு, திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மகாதேவர், திருவண்ணாமலை ஆழ்வார், அண்ணா
நாட்டு உடையார், திருவண்ணாமலை உடையார் ஆகிய பெயர்கள் இருந்ததாக கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது.
* மார்கழி மாதத்தில் பாடப்படும் திருவெம்பாவை பாடலைப் மாணிக்கவாசகர் பாடிய தலம் திருவண்ணாமலை.
* ரமணாசிரம வளாகத்தில் தலைவலி சாமி சமாதி உள்ளது. தலைவலி தீர பக்தர்கள் இங்கு சுற்றி வந்து வேண்டிக் கொள்ளும் வழக்கம் உள்ளது.
* அண்ணாமலையாருக்கு 100 ஏக்கர் நிலம் தானமாக அளித்த வள்ளல் தனக்கோட்டி முதலியார். இவர் இக்கோவிலின் தர்ம
கர்த்தாவாக இருந்தவர்.
* புலி, கரடி, மான், காட்டெருமை ஆகிய விலங்குகள் திருவண்ணாமலையில் வாழ்ந்ததாக சுத்தானந்த பாரதியாரின் கட்டுரைக் குறிப்பு கூறுகிறது.
* பெரிய சந்திரசேகரர், சின்ன சந்திரசேகரர், பக்தானுக்ரஹ சோமாஸ்கந்தர், பெரிய நாயகர், சின்னநாயகர் என அண்ணாமலையாருக்கு உற்சவ மூர்த்திகள் பல இருக்கின்றன.
* இரண்டு தலபுராணங்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு உள்ளன. இதில் அருணகிரிப்புராணத்தை எழுதியவர் கண்கட்டி மறைஞான
சம்பந்தர். அருணாசல புராணத்தை எழுதியவர் சைவ எல்லப்ப நாவலர்.
* சோணாசலத்திற்கு(திருவண்ணாமலைக்கு) சிறந்த க்ஷேத்திரம் இல்லை. சோம வாரத்திற்கு (கார்த்திகை மாத திங்கள்கிழமை விரதம்) சிறந்த விரதம் இல்லை என்று ஒரு பழமொழி உண்டு.
* காலபைரவர், சொர்ண பைரவர் என்று இரு சன்னிதிகளும், கம்பத்து இளையனார், கோபுரத்து இளையனார் என்று இரண்டு முருகன் சன்னிதிகளும் இங்குள்ளன. கிளி கோபுரத்தின் அருகே பிச்சை இளையனார் என்ற முருகன் சன்னிதியும் உள்ளது.
* விசிறி சாமியார் என்னும் யோகி ராம் சுரத்குமார், திருவண்ணாமலையில் வாழ்ந்த காலத்தில், இங்குள்ள சம்பந்த விநாயகர் சன்னிதி முகப்பிலேயே தங்கியிருந்தார்.
* கார்த்திகை தீப திருவிழாவின் போது பஞ்சமூர்த்திகளின் புறப்பாடு நடக்கும். இதற்கு முன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருள்வார். அவர் வந்ததும் மலையில் தீபம் ஏற்றப்படும்.
* சம்பந்த விநாயகர் கோவிலுக்கு எதிரில் உள்ள மண்டபத்தில், அந்தக் கால மன்னர்கள் முடிசூட்டிக் கொள்வது வழக்கம்.
* சிவன் கோவில்களில் ஆறுகால பூஜையின் போது சுவாமிக்கு 16 வகை தீபங்கள் காட்டுவர். இதில் மகாதீபம் என்னும் தீபம் சிவனையே குறிப்பதாகும். திருவண்ணாமலை தீபத்தை மகாதீபம் என்று சொல்வர்.
* புதுச்சேரியில் உள்ள பிரஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப் இண்டாலஜி என்னும் நிறுவனம் திருவண்ணாமலைக் கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்து ஆங்கிலம், பிரெஞ்சு மொழியில் வெளியிட்டுள்ளது.
* மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம் ஆகிய இரு நாட்களில் நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக எழுந்தருள்வார். வேறு எந்த உற்சவரும் இதன் வழியாகச் செல்வதில்லை.
* மலை தீபம் ஏற்ற காண்பிக்கப்படும் தீப்பந்தத்தை "எலால்' என்று சொல்வர். சிக்னல் போல இந்த தீப்பந்தம் காட்டியதும் மலைதீபம் ஏற்ற அண்ணாமலைக்கு அரோகரா என்ற சப்தம் எங்கும் எதிரொலிக்கும்.
* தீபதரிசனம் பார்க்க வருவோருக்கு சட்டிச்சோறு பிரசாதம் அந்தக்காலத்தில் அளிப்பது வழக்கம். இதில் புளியங்கறி, மிளகு ரசம், உப்பு, நெய், தயிர், பாக்கு இருக்கும். வாழை இலையும் தரப்படும்.
* இக்னீஷியஸ் ராக் என்னும் பாறை வகையைச் சேர்ந்த மலை திருவண்ணாமலை. "நெருப்பினால் உண்டான மலை' என்பது இதன் பொருள்.
* அருணகிரியாரின் தாய் முத்தம்மை வழிபட்ட விநாயகர் முத்தம்மை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்தக் கோவில் தேரடி வீதிக்கும், கொசமடத் தெருவுக்கும் இடையே உள்ள ரேடியோ கிரவுண்ட் என்னும் பகுதியில் உள்ளது.
* திருமஞ்சன கோபுரத்தின் வழியாக தினமும் அபிஷேக நீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், சிவன் அபிஷேகத்திற்கு இதைப் பயன்
படுத்துவதில்லை. நடை திறப்பதற்கு முன் இந்நீரைக் கதவின் முன் தெளிப்பது வழக்கம்.
* திருவிழா காலங்களில் நாதஸ்வரத்துடன் நபிரி, பாங்கரா, கொம்பு, செண்டை போன்ற அந்தக் கால வாத்தியங்களும் இங்கு இசைக்கப்படுகின்றன.
* திருவண்ணாமலைக் கோவிலின் பரப்பு 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுர அடி.
* சிவன் கோவில்களில் உற்சவராக சோமாஸ்கந்தர் வீற்றிருப்பார். இங்குள்ள சோமாஸ்கந்தருக்கு மட்டும் "பக்தானுக்ரக சோமாஸ்
கந்தர்' என்னும் சிறப்பு பெயர் வழங்கப்படுகிறது.
* சிவனுக்குரிய 64 மூர்த்தங்களில் ஒன்று அண்ணாமலையார் மூர்த்தம். இதை சிற்பநூல்கள் லிங்கோத்பவ மூர்த்தி என்று குறிப்பிடுகின்றன. கருவறையின் பின்புறத்தில் இவருக்கு சன்னிதி இருக்கும்.
* அண்ணாமலை என்பதற்கு "நெருங்க முடியாத மலை' என்று பொருள். நெருப்பு வடிவமாக இருந்ததால் அடிவாரத்தையும், உச்சியையும் யாராலும் நெருங்க முடியவில்லை என்பது இதன் விளக்கம்.
* 171 அடி உயரம் கொண்டது இங்குள்ள அம்மணியம்மாள் கோபுரம். இது விஜயநகர மன்னர்களால் தொடங்கப்பட்டு, பாதியில் நின்று போனது. இத்திருப்பணியை நடத்தி முடித்த அம்மணி அம்மாளின் பெயரால் தற்போது அழைக்கப்படுகிறது.
* திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை சிறப்பிக்கும் விதத்தில் அஞ்சல் துறை அகல் தீபமிட்ட சித்திர முத்திரையை (பிக்சோரியல் கேன்சலேஷன்) 12.12.1997ல் வெளியிட்டது.
* அண்ணாமலையாருக்கு சாத்தப்படும் ஆடைகள் வைக்கப்படும் அறை வஸ்திர கொட்டடி எனப்படுகிறது. பொக்கிஷ அறைக்கு அருகில் இது உள்ளது.
* ராஜகோபுரத்தின் எதிரில் உள்ள சர்க்கரைக் குளக்கரையில் நந்தி உள்ளது. மலையைச் சுற்றி அமைந்துள்ள அஷ்ட நந்திகளில் இதுவே முதல் நந்தி.
* பஞ்சமுக சுவாமி என்னும் இசக்கி சுவாமிகள் திருவண்ணாமலையை 1008 முறை அங்கப் பிரதட்சணம் செய்தவர். இல்லறத்
துறவியான இவர் 1959ல் திருவண்ணாமலைக்கு வந்தார்.
* திருமூலர் பாடிய திருமந்திரத்தில் திருவண்ணாமலை வரலாறு குறித்து, ஒன்பது பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
* செவ்வாய்க்கிழமையில் திருவண்ணாமலையைச் சுற்றி வந்தால் மோட்சம் கிடைக்கும் என்று மக்களிடம் சொன்னவர் சேஷாத்ரி சுவாமிகள்.
* உயிரை மாய்க்க முயன்ற அருணகிரிநாதரைக் காப்பாற்றிய தலம் திருவண்ணாமலை. இத்தலத்து முருகன் மீது, இவர் 79 திருப்புகழ் பாடல்கள் பாடியள்ளார்.
* மாசி மாதம் முதல் ஐந்து நாட்கள், உண்ணாமுலை அம்மன் சன்னிதியில் தினமும் முகத்தில் படும் சூரியஒளி கொஞ்சம் கொஞ்சமாக பாதம் வரை இறங்கி செல்வது சிறப்பானதாகும்.
* ராஜகோபுரத்தின் கீழ்தளத்திலுள்ள தூண்களில் பரதநாட்டியத்தின் 108 கரணங்கள் அற்புத சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
* திருவண்ணாமலை கோவிலின் தலவிருட்சம் மகுட மரம். இதற்கு மகிழ மரம் என்றும், வடவால விருட்சம் என்றும் பெயருண்டு.
* அக்னி நட்சத்திரத்தின் போது அண்ணாமலையாருக்கு வாசனை திரவியம் கலந்த குளிர்ந்த நீரால் அபிஷேகமும், தயிர் சாத நைவேத்யமும் செய்வதோடு, நீர் சொட்டும் தாராபாத்திரமும் வைக்கின்றனர்.
* கார்த்திகை தீபத்திற்கு மறுநாள், தை மாதத்தின் மூன்றாம் நாள் ஆகிய இரு தினங்களில் அண்ணாமலையாரே இங்கு கிரிவலம் வருவார். பக்தர்கள் அண்ணாமலையாரோடு சேர்ந்து கிரிவலம் வரலாம்.
* மலையின் மீதுள்ள முலைப்பால் தீர்த்தத்தை செப்பனிட்டு திருப்பணி செய்தவர் நரிக்குட்டி சுவாமிகள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் தமிழில் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார்.
* தென்திசை கைலாயம், கவுரி நகரம், சுத்த நகரம், ஞானபுரி என திருவண்ணாமலைக்குரிய வேறு பெயர்கள் உள்ளன.
* வெளிநாட்டவர் திருவண்ணாமலைக்கு வரக் காரணமாக இருந்தவர் பால்பிரண்டன். 1930ல் இங்கு வந்த இவர் எழுதிய நூலில் திருவண்ணாமலை, ரமணர் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இவர் நூல் எழுதிய பின்னரே வெளிநாட்டவரையும் அண்ணாமலை
ஈர்க்கத் தொடங்கியது.
* திருவண்ணாமலை கோவில் கோபுரங்களைப் பற்றி ஆராய்ச்சி நூலை எழுதிய மேலைநாட்டவர் எம். எச். கிரேவ்லி.
* அண்ணாமலையாருக்கு, திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மகாதேவர், திருவண்ணாமலை ஆழ்வார், அண்ணா
நாட்டு உடையார், திருவண்ணாமலை உடையார் ஆகிய பெயர்கள் இருந்ததாக கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது.
* மார்கழி மாதத்தில் பாடப்படும் திருவெம்பாவை பாடலைப் மாணிக்கவாசகர் பாடிய தலம் திருவண்ணாமலை.
* ரமணாசிரம வளாகத்தில் தலைவலி சாமி சமாதி உள்ளது. தலைவலி தீர பக்தர்கள் இங்கு சுற்றி வந்து வேண்டிக் கொள்ளும் வழக்கம் உள்ளது.
* அண்ணாமலையாருக்கு 100 ஏக்கர் நிலம் தானமாக அளித்த வள்ளல் தனக்கோட்டி முதலியார். இவர் இக்கோவிலின் தர்ம
கர்த்தாவாக இருந்தவர்.
* புலி, கரடி, மான், காட்டெருமை ஆகிய விலங்குகள் திருவண்ணாமலையில் வாழ்ந்ததாக சுத்தானந்த பாரதியாரின் கட்டுரைக் குறிப்பு கூறுகிறது.
* பெரிய சந்திரசேகரர், சின்ன சந்திரசேகரர், பக்தானுக்ரஹ சோமாஸ்கந்தர், பெரிய நாயகர், சின்னநாயகர் என அண்ணாமலையாருக்கு உற்சவ மூர்த்திகள் பல இருக்கின்றன.
எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.