கருணை இருந்தால் வள்ளலாகலாம் பொறுமை இருந்தால் மனிதனாகலாம்!


* கருணையுள்ளவர்களாலேயே அன்பை வாரி வழங்க முடியும். எதனாலும் சாதிக்க முடியாததை, பொறுமையால் சாதிக்க முடியும். பொறுமையுள்ளவனே சிறந்த மனிதன். 
* பிறர் பாராட்டும்போது பெருமிதமோ, திட்டும்போது வருத்தமோ கொள்ளாதீர்கள். 
* மனதில் பக்தி தோன்றும்போதுதான், சமூகம் முழுமை பெறுகிறது. ஒவ்வொருவரும் பக்தி என்னும் மாபெரும் சக்தியின் ஒவ்வொரு அங்கமாகவே இருக்கின்றனர்.
* வெறுப்பு, பயம் இருக்குமிடத்தில் கூச்சல் இருக்கும். ஆணவம் உள்ள இடத்தில் பெருமை இருக்கும். அன்பு இருக்குமிடத்தில் நிசப்தம் மட்டுமே இருக்கும். 
* இளமைப்பருவம் வாழ்வில் மிக முக்கியமான அங்கமாகும். அவ்வேளையில் ஒருவனை சரியான வழிக்கு கொண்டு வருவதில் பெரும்பங்கு பெற்றோருக்கு உரியது.
* உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை தியானம் செய்வதற்கும், பிறருக்கு சேவை செய்வதற்கும் பயன்படுத்துங்கள். 
அந்நேரத்தில் பயனற்ற செயல்களைச் செய்யாதீர்கள்.
* எதிர்பார்ப்பு, பேராசை இவை பெரும் துன்பத்தையே தரும். மனநிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ இவ்விரண்டையும் விட்டுவிடுங்கள். 
* நாம் செய்யும் நற்செயல், தீய செயல்களுக்கு ஏற்ப எதிர்காலத்தில் பலனையும் அனுபவிப்போம்.
* சாப்பிடும் உணவு உடலின் அனைத்து பகுதிக்கும் சக்தி தருவதுபோல, தனி மனித அமைதியே முழு உலகத்திற்கும் பரவி சக்தி கொடுக்கிறது.
* கடவுள் அனைவரிடமும் இருக்கிறார். எனவே நீங்கள் பிறருக்குச் செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவையே ஆகும்.
* நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே செல்கிறீர்கள்? இந்த மூன்று கேள்விக்கும் "கடவுள்' என்ற ஒரு வார்த்தை மட்டுமே 
பதிலாக இருக்கும்.
* பசிப்பிணியை போக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். வெறுமனே தத்துவங்கள் மட்டும் பேசிக்கொண்டிருப்பதால் ஒரு நன்மையும் இல்லை.
* மனிதராகப் பிறந்தது, பக்தியின் மூலமாக இறைவனை அடைவதற்காகத்தான் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
* அனைவருக்குள்ளும் அன்பு இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் மனிதரே நல்லறிவு கொண்டவர் ஆவார்.
* சேவை செய்வதன் மூலம், பிறர் மீது அன்பை வெளிப்படுத்துவதோடு, அதை பல இடங்களிலும் பரவவும் உதவுகிறோம்.
* கருத்தை வலியுறுத்தி சத்தமிடுவதால் பயனில்லை. வாதத்தை சரியாக வைத்தால் மட்டுமே கருத்தை நிலைநிறுத்த முடியும்.
* அன்பை வெளிப்படுத்துவதற்கு மென்மையான பேச்சு போதும். மனிதாபிமானம் உள்ளவர்களிடம் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும். அவர்களுக்கு மாறுபாடான வாழ்க்கை இருப்பதில்லை.
* அமைதியாக இருப்பவர்களுக்கு வாழ்வில் ஏற்றம், இறக்கம் இரண்டும் இல்லை. அவர்கள் எப்போதும் ஒரு நிலையிலேயே இருக்கிறார்கள்.

சொல்கிறார் சாய்பாபா

எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.

Share this

Related Posts

Previous
Next Post »