கம்ப்யூட்டரைக் கைப்பற்றி காசு கேட்கும் வைரஸ்

K.D.D.

28DEC
2015 
07:50
மால்வேர் புரோகிராம்கள் மூலம் கம்ப்யூட்டர்களைக் கைப்பற்றி, அவற்றை முடக்கி வைத்து, இயங்க வேண்டுமானால், குறிப்பிட்ட அளவு பணம் தர வேண்டும் என்ற அச்சுறுத்தல்களைப் பெறுவதில், ஆசியாவில் இந்தியா மூன்றாவது இடம் பெற்றுள்ளது. இத்தகைய மால்வேர் புரோகிராம்களை Ransomware malware programs என அழைக்கிறார்கள்.
தற்போது 'எங்கும் எதிலும் இணையம்' (Internet of Things) என்ற பழக்கம் பரவி வருவதால், இத்தகைய மால்வேர் புரோகிராம்கள் பரவுவது இன்னும் அதிகரிக்கும் என்று, வைரஸுக்கு எதிரான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும், அமெரிக்காவினைச் சேர்ந்த செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது. 
வரும் 2016 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செமாண்டெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற Ransomware threats இந்தியாவில் ஆண்டுக்கு 60,00-0 என்ற எண்ணிக்கையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு, 170 மால்வேர் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த Ransomware புரோகிராம்கள் பாதித்த கம்ப்யூட்டர்கள், அதன் பயனாளர்களைத் தங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தாதபடி முடக்கிவிடுகின்றன. அல்லது மிகக் குறைவான அளவில் பயன்படுத்த அனுமதிக்கின்றன. பயனாளர்கள், குறிப்பிட்ட தொகையினை, இணைய வங்கிக் கணக்கில் செலுத்துமாறு அச்சுறுத்தப்படுகின்றனர். அப்படிச் செலுத்தினால் மட்டுமே, கம்ப்யூட்டர்களைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும்; டேட்டாக்களைப் பெற முடியும் என்று அச்சுறுத்துகின்றன. அது உண்மையாகவும் உள்ளது. இவ்வாறு கம்ப்யூட்டர் அல்லது அவற்றின் டேட்டாக்களை முடக்கி வைக்கும் இத்தகைய ransomware புரோகிராம்களை Crypto-ransomware என அழைக்கின்றனர். இந்தியாவில் காணப்படும் ransomware புரோகிராம்களில் 86% இந்த வகை Crypto-ransomware ஆக உள்ளன. 
அமெரிக்க நிறுவனமான செமாண்டெக் அண்மையில் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் அமைப்பான National Association of Software and Services Companies (Nasscom)த்துடன் இணைந்து, இந்தியாவில் இணையப் பாதுகாப்பிற்கான சேவைகளை வழங்கி, உலக அளவில் அதற்கான திறமைகளை இந்தியர்களிடம் வளர்க்க இயங்கி வருகிறது. இந்த வகையில் பயிற்சி பெற்ற இளைஞர்கள், இப்பிரிவில் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். ஏனென்றால், இப்போது, இணையத்தில் நாம் சந்திக்கும் ஆபத்துக்களின் வகைகள் பலவாறாய்ப் பெருகி வருகின்றன. அவை அனைத்திற்குமான முழுமையான பாதுகாப்பு புரோகிராம்களை வடிவமைப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. 
2020 ஆம் ஆண்டில், உலக அளவில் ஏற்பட இருக்கும் 30,000 கோடி டாலர் மதிப்பிலான இணைய வர்த்தகத்தில், 5 முதல் 6 சதவீத வர்த்தகத்தினை இந்தியா மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டு வருகிறது என மின்னணுவியல் துறையும், தகவல் தொழில் நுட்பத் துறையும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன. Internet and Mobile Association of India (IAMAI) அமைப்பு இது குறித்து கூறுகையில், வரும் 2016 ஆம் ஆண்டில், 40.2 கோடிக்கும் மேலான இணையப் பயனாளர்களுடன், இந்தியா அமெரிக்காவையும் மிஞ்சி விடும் என அறிவித்துள்ளது. அடுத்த ஜூன் மாதத்தில், இது 46.2 கோடியாக உயரும் எனவும் தெரிகிறது. 
இந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, செமாண்டெக் நிறுவனத்தின் அறிக்கை, இந்திய பயனாளர்களையும், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தயாரிப்பவர்களையும் எச்சரித்துள்ளதாகவே கருதப்படுகிறது. செமாண்டெக் நிறுவனம் ஆண்டு தோறும் தன் கணிப்புகளிலிருந்து, பல முடிவுகளை, உலகளாவிய அளவில் வெளியிட்டு வருகிறது. 4.15 கோடி வைரஸ் பாதிப்புகளை ஆண்டு தோறும் இது கண்காணிக்கிறது. இந்த கண்காணிப்பு 157 நாடுகளில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்தியாவிற்கு இந்நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையினை சரியான முறையில் எடுத்துக் கொண்டு, நம் மென்பொருள் வல்லுநர்கள் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.
THANKS - DHINAMALAR

Share this

Related Posts

Previous
Next Post »