K.D.D.
04JAN2016
அண்மையில் கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை, இந்தியாவிற்கு வருகை புரிந்தபோது பல திட்டங்களை இந்தியாவிற்கென அறிவித்துள்ளார். முன்னர், நம் பிரதமர் அமெரிக்கா சென்ற போது, கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு, பிரதமரை தலைமை விருந்தினராக அழைத்துச் சென்று கூகுள் நிறுவனத்தின் பல திட்டங்களை விளக்கினார்.
இந்தியாவிற்கு சுந்தர் பிச்சை வந்த போது, பிரதமர் மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து உரையாடினார். டில்லியில் கல்லூரி வளாகம் ஒன்றில், 1800க்கும் மேற்பட்ட மாணவர்களிடையே அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். இந்த நிகழ்வுகளில், இந்தியாவிற்கென கூகுள் நிறுவனம் மேற்கொள்ள இருக்கின்ற பல திட்டங்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றை இங்கு காணலாம்.
கூடுதல் வேகம் பெறும் கூகுள் வழி தேடல்: இந்தியாவில், கூகுள் தேடல் வேகம் அதிகரிக்கப்படும். குறிப்பாக, மிக மெதுவாகச் செயல்படும் இணைய இணைப்பிலும் இது சாத்தியமாகும். இணைய தளங்கள் தேடலின் வழியாக, கூகுள் தேக்கி வைத்துக் கொண்டிருக்கும் முடிவுகள் மூலம், இணையப் பக்கங்கள் சில நொடிகளில், நம் தேடலுக்கான விடைகளைத் தருவது உறுதி செய்யப்படும். இந்தியாவில், இணையம் தேடுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் 2ஜி அலைவரிசை இணைப்பினையே பயன்படுத்தி வருகின்றனர். 3ஜி அலைவரிசையிலும், 2ஜி வேக இணைப்பே இருப்பதாகக் கூறுகின்றனர். இந்த இரு வகையினர் குறைகளைத் தீர்க்கும் வகையில், புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
ரயில்வே நிலையங்களில் இலவச வை பி: இந்தியாவில், 100 ரயில்வே நிலையங்களில், மக்கள் பயன்படுத்த இலவசமாக வை பி இணைப்பு வழங்கும் திட்டத்தினை கூகுள் அமல்படுத்த இருக்கிறது. ஜனவரி முதல் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு, பின்னர் மற்ற நிலையங்களில் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். இதற்கென, கூகுள், இந்திய அரசின் Railtel நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே அமைத்துள்ள பைபர் ஆப்டிக் நெட்வொர்க் வலைப்பின்னல் இதற்கெனப் பயன்படுத்தப்படும். தினந்தோறும் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்காக, ட்ரெய்ன்களில் பயணம் மேற்கொள்ளும் வர்த்தகர்களுக்கு, இந்த இலவச வை பி பேருதவியாக இருக்கும்.
உடனடி மொழி பெயர்ப்பு: கூகுள் நிறுவனத்தின், ஸ்மார்ட் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் இயக்கத்தில், உடனடி மொழி பெயர்ப்பு வசதிக்கான செயலி செயல்படுத்தப்படும். இந்த திட்டமும் 2016ல் நடைமுறைக்கு வரும். ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், ஐகான் ஒன்றைத் தட்டி, மக்கள் தாங்கள் விரும்பும் இந்திய மொழியில் டெக்ஸ்ட் அமைக்க முடியும். பயனாளர்கள், இதற்காகத் தாங்கள் பயன்படுத்தும் செயலிகளை விட்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. தொடக்கத்தில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இடையே இயங்கும் இந்த செயலி, படிப்படியாக மற்ற இந்திய மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
யு ட்யூப் தேக்ககம்: யு ட்யூப் பயனாளர்கள், இனி விடியோ ஒன்றை இடையே நிறுத்திப் பின்னர் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட யு ட்யூப் பைல், அதற்கான தேக்ககத்தில் தேக்கி வைக்கப்படும். இதற்கென கூகுள் 'pause to buffer' என்னும் திட்டத்தினைத் தரும். இந்தியாவிலிருந்து யு ட்யூப் தளத்தில் ஏற்றப்படும் பைல்கள் தற்போது இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாகவும், பயனாளர்கள் யு ட்யூப் தளத்தினைப் பயன்படுத்தும் நேரம் 150% அதிகரித்துள்ளதாகவும், கூகுள் அறிவித்துள்ளது. இது மற்ற நாடுகளின் பயன் நேர சராசரியைக் காட்டிலும் மிக அதிகமானது.
கிரிக்கெட் ஸ்கோர், ரீ ப்ளே: விரைவில் கூகுள் தேடல் கட்டத்தில், கிரிக்கெட் போட்டிகளில் ஈட்டப்படும் ரன் மற்றும் பிற தகவல்கள், அவ்வப்போது உடனுக்குடன் கிடைக்கும் வகையில், செயலி இயக்கப்படும். கிரிக்கெட் போட்டிகளின் முக்கிய நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் பார்க்கும் வசதியும் தரப்படும்.
ஹைதராபாத் நகரில் புதிய அலுவலகம்: ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரில், கூகுள் நிறுவனத்தின் புதிய பெரிய அலுவலகம் ஒன்று அமைய இருக்கிறது. பொறியியல் மற்றும் வர்த்தக நிர்வாக மேலாண்மை படித்தவர்கள் பலருக்கு இங்கு வேலை வாய்ப்புகள் தரப்படும்.
20 லட்சம் பேருக்கு பயிற்சி: இந்தியாவில் இயங்கும் 30 பல்கலைக் கழகங்களில் படிக்கும் பொறியியல் மாணவர்களில், 20 லட்சம் பேருக்கு, மூன்று ஆண்டுகளில், ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான புரோகிராம் எழுதுவதில் பயிற்சி தரப்படும். இத்திட்டம் இந்தியாவின் National Skill Development Corporation of India என்னும் அமைப்புடன் செயல்படுத்தப்படும்.
கூகுள் மேம் மேம்பாடு: கூகுள் மேப்ஸ், இந்தியாவைப் பொறுத்தவரை, இணைய இணைப்பின்றியே கிடைக்கும். வழி காட்டலில், ஒவ்வொரு திருப்பமும் கவனத்தில் கொள்ளப்படும். கூகுள் மேப்ஸ் செயலியில், இந்தியா அதன் உள்ளூர் வழி காட்டலில் மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
க்ரோம்பிட்: ரூ. 7,999 விலையில், கேண்டி பார் அளவிலான ஸ்டிக் கம்ப்யூட்டர் Asus Chromebit என்ற பெயரில் வெளியிடப்படும். இதன் மூலம், பழைய கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள், குறைந்த செலவில், புதிய கம்ப்யூட்டருக்கு மாறிக் கொள்ள இயலும்.
லூன் இணையம்: கொள்கை அளவில், இந்திய அரசு, கூகுள் நிறுவனம் தன் லூன் இணைய திட்டத்தினைச் செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது. 'Project Loon' என அழைக்கப்படும் இந்த திட்டம் விரைவில் சோதனை அளவில் மேற்கொள்ளப்படும். வெற்றியாக இயங்குவது உறுதி செய்யப்பட்டவுடன், இது செயல்படுத்தப்படும். இதன் மூலம் இணைப்பினைப் பெற முடியாமல் இருக்கும் கிராமங்களுக்கு, விண்ணில் பறக்கும் பலூன்கள் வழியாக, இணைய இணைப்பு வழங்கப்படும். இந்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்படும். அரசு இதில் சில பிரச்னைகளை முன் வைத்துள்ள போதிலும், கூகுள் நிறுவனத் தலைவர், சுந்தர் பிச்சை, இதனை வெற்றிகரமாக இந்தியாவில் செயல்படுத்தும் உறுதியுடன் உள்ளார்.
இந்தியப் பெயரில் அடுத்த ஆண்ட்ராய்ட்: ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், அதன் அடுத்த அடுத்த பதிப்புகளை, இனிப்பு மிட்டாய் பெயர்கள் கொண்டு அழைத்து வருகிறது. கப் கேக், டோநட், எக்ளெர், ப்ரையோ, ஜிஞ்சர் ப்ரெட், ஹனி கோம்ப், ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஜெல்லி பீன், கிட்கேட், லாலிபாப், மார்ஷ்மலாய் எனப் பெயர்களைச் சூட்டியது. அடுத்த பெயர், இந்தியாவில் சுவைக்கப்படும் ஒரு இனிப்பான உணவுப் பொருளின் பெயராக இருக்கும் என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். வேடிக்கையாக இது பற்றிக் கூறுகையில், ஆங்கில எழுத்து P எனில், அது தென்னிந்திய “பாயசம்” ஆகக் கூட இருக்கலாம் என்று குறிப்பிட்டார். என்ன பெயர் வரப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்தியாவிற்கு சுந்தர் பிச்சை வந்த போது, பிரதமர் மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து உரையாடினார். டில்லியில் கல்லூரி வளாகம் ஒன்றில், 1800க்கும் மேற்பட்ட மாணவர்களிடையே அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். இந்த நிகழ்வுகளில், இந்தியாவிற்கென கூகுள் நிறுவனம் மேற்கொள்ள இருக்கின்ற பல திட்டங்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றை இங்கு காணலாம்.
கூடுதல் வேகம் பெறும் கூகுள் வழி தேடல்: இந்தியாவில், கூகுள் தேடல் வேகம் அதிகரிக்கப்படும். குறிப்பாக, மிக மெதுவாகச் செயல்படும் இணைய இணைப்பிலும் இது சாத்தியமாகும். இணைய தளங்கள் தேடலின் வழியாக, கூகுள் தேக்கி வைத்துக் கொண்டிருக்கும் முடிவுகள் மூலம், இணையப் பக்கங்கள் சில நொடிகளில், நம் தேடலுக்கான விடைகளைத் தருவது உறுதி செய்யப்படும். இந்தியாவில், இணையம் தேடுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் 2ஜி அலைவரிசை இணைப்பினையே பயன்படுத்தி வருகின்றனர். 3ஜி அலைவரிசையிலும், 2ஜி வேக இணைப்பே இருப்பதாகக் கூறுகின்றனர். இந்த இரு வகையினர் குறைகளைத் தீர்க்கும் வகையில், புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
ரயில்வே நிலையங்களில் இலவச வை பி: இந்தியாவில், 100 ரயில்வே நிலையங்களில், மக்கள் பயன்படுத்த இலவசமாக வை பி இணைப்பு வழங்கும் திட்டத்தினை கூகுள் அமல்படுத்த இருக்கிறது. ஜனவரி முதல் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு, பின்னர் மற்ற நிலையங்களில் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். இதற்கென, கூகுள், இந்திய அரசின் Railtel நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே அமைத்துள்ள பைபர் ஆப்டிக் நெட்வொர்க் வலைப்பின்னல் இதற்கெனப் பயன்படுத்தப்படும். தினந்தோறும் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்காக, ட்ரெய்ன்களில் பயணம் மேற்கொள்ளும் வர்த்தகர்களுக்கு, இந்த இலவச வை பி பேருதவியாக இருக்கும்.
உடனடி மொழி பெயர்ப்பு: கூகுள் நிறுவனத்தின், ஸ்மார்ட் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் இயக்கத்தில், உடனடி மொழி பெயர்ப்பு வசதிக்கான செயலி செயல்படுத்தப்படும். இந்த திட்டமும் 2016ல் நடைமுறைக்கு வரும். ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், ஐகான் ஒன்றைத் தட்டி, மக்கள் தாங்கள் விரும்பும் இந்திய மொழியில் டெக்ஸ்ட் அமைக்க முடியும். பயனாளர்கள், இதற்காகத் தாங்கள் பயன்படுத்தும் செயலிகளை விட்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. தொடக்கத்தில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இடையே இயங்கும் இந்த செயலி, படிப்படியாக மற்ற இந்திய மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
யு ட்யூப் தேக்ககம்: யு ட்யூப் பயனாளர்கள், இனி விடியோ ஒன்றை இடையே நிறுத்திப் பின்னர் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட யு ட்யூப் பைல், அதற்கான தேக்ககத்தில் தேக்கி வைக்கப்படும். இதற்கென கூகுள் 'pause to buffer' என்னும் திட்டத்தினைத் தரும். இந்தியாவிலிருந்து யு ட்யூப் தளத்தில் ஏற்றப்படும் பைல்கள் தற்போது இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாகவும், பயனாளர்கள் யு ட்யூப் தளத்தினைப் பயன்படுத்தும் நேரம் 150% அதிகரித்துள்ளதாகவும், கூகுள் அறிவித்துள்ளது. இது மற்ற நாடுகளின் பயன் நேர சராசரியைக் காட்டிலும் மிக அதிகமானது.
கிரிக்கெட் ஸ்கோர், ரீ ப்ளே: விரைவில் கூகுள் தேடல் கட்டத்தில், கிரிக்கெட் போட்டிகளில் ஈட்டப்படும் ரன் மற்றும் பிற தகவல்கள், அவ்வப்போது உடனுக்குடன் கிடைக்கும் வகையில், செயலி இயக்கப்படும். கிரிக்கெட் போட்டிகளின் முக்கிய நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் பார்க்கும் வசதியும் தரப்படும்.
ஹைதராபாத் நகரில் புதிய அலுவலகம்: ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரில், கூகுள் நிறுவனத்தின் புதிய பெரிய அலுவலகம் ஒன்று அமைய இருக்கிறது. பொறியியல் மற்றும் வர்த்தக நிர்வாக மேலாண்மை படித்தவர்கள் பலருக்கு இங்கு வேலை வாய்ப்புகள் தரப்படும்.
20 லட்சம் பேருக்கு பயிற்சி: இந்தியாவில் இயங்கும் 30 பல்கலைக் கழகங்களில் படிக்கும் பொறியியல் மாணவர்களில், 20 லட்சம் பேருக்கு, மூன்று ஆண்டுகளில், ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான புரோகிராம் எழுதுவதில் பயிற்சி தரப்படும். இத்திட்டம் இந்தியாவின் National Skill Development Corporation of India என்னும் அமைப்புடன் செயல்படுத்தப்படும்.
கூகுள் மேம் மேம்பாடு: கூகுள் மேப்ஸ், இந்தியாவைப் பொறுத்தவரை, இணைய இணைப்பின்றியே கிடைக்கும். வழி காட்டலில், ஒவ்வொரு திருப்பமும் கவனத்தில் கொள்ளப்படும். கூகுள் மேப்ஸ் செயலியில், இந்தியா அதன் உள்ளூர் வழி காட்டலில் மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
க்ரோம்பிட்: ரூ. 7,999 விலையில், கேண்டி பார் அளவிலான ஸ்டிக் கம்ப்யூட்டர் Asus Chromebit என்ற பெயரில் வெளியிடப்படும். இதன் மூலம், பழைய கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள், குறைந்த செலவில், புதிய கம்ப்யூட்டருக்கு மாறிக் கொள்ள இயலும்.
லூன் இணையம்: கொள்கை அளவில், இந்திய அரசு, கூகுள் நிறுவனம் தன் லூன் இணைய திட்டத்தினைச் செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது. 'Project Loon' என அழைக்கப்படும் இந்த திட்டம் விரைவில் சோதனை அளவில் மேற்கொள்ளப்படும். வெற்றியாக இயங்குவது உறுதி செய்யப்பட்டவுடன், இது செயல்படுத்தப்படும். இதன் மூலம் இணைப்பினைப் பெற முடியாமல் இருக்கும் கிராமங்களுக்கு, விண்ணில் பறக்கும் பலூன்கள் வழியாக, இணைய இணைப்பு வழங்கப்படும். இந்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்படும். அரசு இதில் சில பிரச்னைகளை முன் வைத்துள்ள போதிலும், கூகுள் நிறுவனத் தலைவர், சுந்தர் பிச்சை, இதனை வெற்றிகரமாக இந்தியாவில் செயல்படுத்தும் உறுதியுடன் உள்ளார்.
இந்தியப் பெயரில் அடுத்த ஆண்ட்ராய்ட்: ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், அதன் அடுத்த அடுத்த பதிப்புகளை, இனிப்பு மிட்டாய் பெயர்கள் கொண்டு அழைத்து வருகிறது. கப் கேக், டோநட், எக்ளெர், ப்ரையோ, ஜிஞ்சர் ப்ரெட், ஹனி கோம்ப், ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஜெல்லி பீன், கிட்கேட், லாலிபாப், மார்ஷ்மலாய் எனப் பெயர்களைச் சூட்டியது. அடுத்த பெயர், இந்தியாவில் சுவைக்கப்படும் ஒரு இனிப்பான உணவுப் பொருளின் பெயராக இருக்கும் என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். வேடிக்கையாக இது பற்றிக் கூறுகையில், ஆங்கில எழுத்து P எனில், அது தென்னிந்திய “பாயசம்” ஆகக் கூட இருக்கலாம் என்று குறிப்பிட்டார். என்ன பெயர் வரப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.